என் சுவாசத்து சூடு
குளிர்ந்து நெடுநாள் ஆயிற்று
என் தேகத்தின் உணர்வு
சுவாலை தீண்டாமலும் தூண்டாமலும்
இருப்பதால் அது இருளை
தன் வசமாக்கி கொண்டது
என் இதயம்
இரத்த ஓட்டத்தினூடே
கொண்டிருந்த
எண்ண ஓட்டம் தனக்கு தானே
விலங்கிட்டு கொண்டு
விடுதலையடைய மறுக்கிறது
என் கூந்தலின் மயிர் நாண்கள்
தன் வாசத்தை மறந்த நாள்
எந்த நாள் என கேட்டுகொண்டன
என் முகத்தில்
புன்னகை பூக்க மகிழ்ச்சி எனும்
மொட்டுவிட மறுக்கிறது
என் மனம்
என் அங்க அசைவுகளும்
என் ஆசை கனவுகளும்
அடங்கி ஒடுங்கி முடங்கவிட்டன
ஆனாலும்!!
ஏன்......??
என் உடலில் இருக்கும்
செந்நீர் துளிகளை விட
என் விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகள்
அதிகரிக்கிறதே..??
ஆர்பெடுக்கிறதே..??
வயல்வீடு விற்று
அயல்நாடு சென்று
அரும்பாடு பட்டு
அந்நாட்டு கிளர்ச்சிக்கு
பலியாடு ஆனவனே
என் ஆண் அவனே
உன்னை நினைக்கையிலே....