Sunday, December 18, 2016

நம்பிக்கையே பலம்

கால இருக்கையின்
நீண்ட அமர்வில்
நீள் நெடு ஓடையின் அருகே
ஆலக்கரு
அது தன்  அன்னைமடி   
சுமந்த சிவந்த கர்ப்பப்பையில்
நிறைந்து இருந்தது

அங்கே..
சிவந்த கர்ப்பம் சுவைக்க
சிருகுருவிகள் கூட   
அன்னையும் விட்டுவிட்டது

கரு கர்ப்பப்பை வெளியேறி
சிறுகுருவியின்  
அகப்பையில் அகப்பட்டு கொண்டது
எங்கோ நெடுந்தூரம் பறந்து பின்
எச்சமென தங்கிய இடத்தில்
தன் பின்வாய் வழியே
துப்பி குருவியும் விட்டுவிட்டுச் சென்றது

குருவி கொடுத்த தான பிசுபிசுப்பில்
ஒட்டிய இடத்தை
கெட்டியாய் பற்றிக் கொண்டக் கரு

கடும் காற்று
சுடும் வெப்பம்
கொடும் குளிர் என
கோரக் கரங்கள் ஏற்றது  

மழை உமிழ்ந்த உமிழ்நீரில்
முகம் கழுவி
துடிப்புடன் எழுந்து
விருட்சமென வளர்ந்த
வித்துக்குத்தான் தெரியும்
நம்பிக்கையே பலம் என்று ......


No comments:

Post a Comment