மேய்ந்து கொண்டிருந்த
கவுதாரிக் குஞ்சுகள்
படபடத்த சத்தத்துடன்
ஓடி பறந்துவிட வேண்டாமென்று
என் வாகனத்தின்
வேகத்தை குறைத்தபோது
வாழ்ந்த வற்றிய குளத்தின்
அருகில் நின்று
“தண்ணி இருக்குதா தம்பி..?”
என கேட்ட முதியவருக்கு
எச்சிலை விழுங்கி
என் வறண்ட தொண்டைக்கு
ஈரத்தை ஏற்படுத்திவிட்டு
“இல்லை” என
பதில் சொல்லி முடித்தேன்
வந்தே விட்டது வரிசை
வங்கியிலிருந்து
எனது வண்டிவரை
வரிசையில் நின்றவர்களில்
இடையிடையே
ஜிஹெச் மருந்து வாடையும்
ரேசன் கடை மண்ணெண்ணெய்
வாடையும் அதிகம் வீச
அவர்கள் விறைப்பாக
நின்றிருந்தார்கள்
வெண்சட்டை வேந்தர்களின்
கையிலிருந்த வங்கிபுத்தகம்
விசிரியென
உருமாறியிருந்தது
ஜியோ சிம் வாங்க போனவர்களின்
கால்கள் நடனமிட்டுகொண்டிருக்க
ஒருவர் மட்டும் மூச்சு
எழைக்க ஓடிவந்து நின்றார்
அவரிடம் உப்பு வதந்தி
ஒட்டிகொண்டிருந்தது..
No comments:
Post a Comment