எதிர்பாராமல்
எதிர்வந்தவளின் உதடுகள் உதிர்த்தது
அரசியல்வாதிகளின் பாசாங்கு
சிரிப்புகளை
வானம்போல்
அவள் வாழ்க்கையும்
கருணை காட்டவில்லை
வறட்சி மேலோங்கி இருந்தது
உடலிலும்
உணர்விலும்
குறத்தி கையிலிருந்த
ஒலைத்தோடு கூட உதவவில்லை
அவள் காதேறி கமலமாய் மலர
சிரங்குடையோன் அரிப்பில் உருவான
மேடுபள்ள திட்டுக்கள் அவள்
மேனி ஒத்திருந்தது
மருதாணி மீறிய
மாயாஜாலம் காலம்
அவள் முடிகள்
பொன் நிறங்களாகி இருந்தன
சலவைக்கு உதவாத
கந்தல் துணி
அவள் உடலின் அலங்கார உடை
அன்றைய பதினாறு வயது
என் பவளமல்லியிடம்
அதை கேட்க நினைத்தது மனம்
நடை கட்டி நகர்ந்தது
இந்த உயிருள்ள பிணம்
அந்த கேள்வியை கேட்காமலும்
வெந்த மரத்திற்கு
வெந்நீர் ஊற்றாமலும்
No comments:
Post a Comment